பொருளாதார நெருக்கடி இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்

இலங்கை: ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம்... பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் எனவே அதற்கேற்ப தேர்தலை நடத்துவதில் தவறில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.