காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை... தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தோ்வு கிடையாது என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும். அடுத்து அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

அதேவேளையில், தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.