மும்பையில் அம்பேத்கரின் வீடு மீது நடந்த தாக்குதலுக்கு துணை முதல்-மந்திரி அஜித்பவார் கண்டனம்

மும்பை தாதரில் சட்டமேதை அம்பேத்கரின் வீடு அமைந்துள்ளது. சமூக விரோதிகள் சிலர் அம்பேத்கரின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துணை முதல்-மந்திரி அஜித்பவார் சட்டமேதை அம்பேத்கரின் வீடு மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தீய நோக்கத்துடன் சமூக விரோத சக்திகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீய நோக்கத்துடன் சமூக விரோத சக்திகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தை மாநில அரசு தீவிரமாக கவனிக்கிறது. போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சமூக விரோதிகளை விரைவில் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த நேரத்தில் மக்கள் அமைதியையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அஜித்பவார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.