இலங்கை - சீன உறவை தொடர்ந்து மேம்படுத்த ஆவல்; புதிய தூதுவர் தகவல்

புதிய சீன தூதுவர் தகவல்... இலங்கை - சீன உறவை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தமது அபிலாஷை என இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் ஷென் ஹூங் தெரிவித்துள்ளார்.

அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து தமக்குரிய பதவியை பொறுப்பேற்கும் உரையை நிகழ்த்திய போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சீன அரசாங்கமும் மக்களும் ஒப்படைத்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட தூதுவராக தாம் இலங்கை என்ற நேச நாட்டுக்கு வருவதாக அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவு மூலோபாய பங்காளித்துவமாக பரிணமித்துள்ளது. பல்வேறு துறைகளில் நீடிக்கும் ஒத்துழைப்பின் மூலம் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச அலுவல்களில் சிறந்த கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது என புதிய சீனத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.