கடந்த 24 மணிநேரத்தில் 1382 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

சென்னை: கொரோனா பரவல்... தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 1,382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 607, செங்கல்பட்டில் 240, கோவையில் 89, திருவள்ளூரில் 83 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 34,66,872-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,026 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,22,169-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 24,775 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 6,677 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.