டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்தாரா ?

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் பராக் ஒபாமா பிரதமர் மோடிக்கு கண்டனத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் வைரல் தகவல்களுடன் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மீது பராக் ஒபாமா ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட் கொண்ட படம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரதமர் மோடி மற்றும் ஒபாமா கை குலுக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, பராக் ஒபாமா ட்விட்டர் பதிவு உண்மையில்லை என்பதும் அது மார்பிங் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி வரை ஒபாமா தற்போதைய விவசாயிகள் போராட்டம் பற்றி எந்த பதிவையும் ட்விட்டரில் மேற்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும், வைரல் பதிவுகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும். இத்துடன் பதிவில் பல்வேறு எழுத்து பிழைகள் இருக்கின்றன. அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று பராக் ஒபாமா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.