வாகா எல்லை பகுதியில் இந்திய தேசிய கொடி இப்படியொரு சாதனை படைத்ததா ? - உண்மை பின்னணி என்ன?

இந்திய தேசிய கொடியை ஏற்றும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய கொடி உலக சாதனை படைத்து இருப்பதாக கூறும் தகவல்களுடன் இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதில் 120x80 அடி பெரிய தேசிய கொடி பஞ்சாபின் வாகா எல்லை பகுதியில் உள்ள 360 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டு இருப்பதாகவும், இது ஒரு உலக சாதனை என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, வாகா எல்லையில் உள்ள தேசிய கொடி கொண்டு இப்படி ஒரு உலக சாதனை படைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ 2016 ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

வீடியோ தலைப்பில் மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை முதல்வர் கேசிஆர் ஐதராபாத்தில் ஏற்றுகிறார் என யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் தேசிய கொடி 108x72 அடி அளவு கொண்டது என்றும் இது 291 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டது ஆகும். இது 2016 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட போது இந்தியாவின் பெரிய தேசிய கொடி என்ற பெருமையை பெற்று இருந்தது.

அதன்படி, வைரல் வீடியோவில் இருக்கும் தேசிய கொடி வாகா எல்லையில் அமைக்கப்பட்டது இல்லை என்பதும், இது சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பதும் தெரிய வந்துவிட்டது. போலி செய்திகளால் சில சமயங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு விடலாம். எனவே போலீஸ் செய்திகளை பரப்பாதீர்கள்.