மீனவர்களுக்கு டீசல் மானியம் உயர்த்தப்படும்... புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: டீசல் மானியம் உயர்த்தப்படும்... புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இதன்படி மீனவர்களுக்கு டீசல் மானியம் தெடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இனி லிட்டருக்கு ரூ.12-க்கு மிகாமல் மானியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

புதுவை மாநிலத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் 2009 முதல் டீசல் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சம்மேளனத்தின் அங்கீ கரிக்கப்பட்ட நுகர்வோர் பெட்ரோல் பங்குகளில் மீனவர்கள் டீசல் வாங்கினால் மானியம் கிடைத்தது.