தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நீடித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று தாக்குதலுக்கு நேற்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 173 செங்கல்பட்டு - 2,358 சென்னை - 10,656 கோவை - 4,981 கடலூர் - 1,498 தர்மபுரி - 1,031 திண்டுக்கல் - 479 ஈரோடு - 1,074 கள்ளக்குறிச்சி - 511 காஞ்சிபுரம் - 944 கன்னியாகுமரி - 980 கரூர் - 486 கிருஷ்ணகிரி - 828 மதுரை - 738 நாகை - 573 நாமக்கல் - 1,021 நீலகிரி - 971 பெரம்பலூர் - 128 புதுக்கோட்டை - 741 ராமநாதபுரம் - 154 ராணிப்பேட்டை - 444 சேலம் - 2,807 சிவகங்கை - 268 தென்காசி - 467 தஞ்சாவூர் - 1,220 தேனி - 546 திருப்பத்தூர் - 575 திருவள்ளூர் - 1,596 திருவண்ணாமலை - 927 திருவாரூர் - 1,068 தூத்துக்குடி - 605 திருநெல்வேலி - 904 திருப்பூர் - 1,667 திருச்சி - 778 வேலூர் - 903 விழுப்புரம் - 1,003 விருதுநகர் - 263 விமானநிலைய கண்காணிப்பு -27 ரெயில் நிலைய கண்காணிப்பு - 2