தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் தளர்வுகள் மற்றும் அதிகப்படியான பரிசோதனைகள் காரணமாக நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 3 ஆயிரத்து 624 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 8 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 9 பேர், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 72 பேர் ஆவர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. உள்மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:- அரியலூர் - 4 செங்கல்பட்டு - 248 சென்னை - 1,939 கோவை - 33 கடலூர் - 9 தர்மபுரி - 2 திண்டுக்கல் - 26 ஈரோடு - 14 கள்ளக்குறிச்சி - 18 காஞ்சிபுரம் - 98 கன்னியாகுமரி - 32 கரூர் - 1 கிருஷ்ணகிரி - 26 மதுரை - 217 நாகை - 31 நாமக்கல் - 3 நீலகிரி - 10 பெரம்பலூர் - 3 புதுக்கோட்டை - 18 ராமநாதபுரம் - 93 ராணிப்பேட்டை - 96 சேலம் - 34 சிவகங்கை - 28 தென்காசி - 9 தஞ்சாவூர் - 16 தேனி - 35 திருப்பத்தூர் - 16 திருவள்ளூர் - 146 திருவண்ணாமலை - 110 திருவாரூர் - 46 தூத்துக்குடி - 43 திருநெல்வேலி - 11 திருப்பூர் - 9 திருச்சி - 31 வேலூர் - 118 விழுப்புரம் - 51