10 ஆண்டுகளாக நடந்த விவாகரத்து வழக்கு... வாபஸ் வாங்கி மனைவியுடன் இணைந்தார்

கர்நாடகா: விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கி தன் மனைவியுடன் மீண்டும் இணைந்துள்ளார் முதியவர் ஒருவர்.

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது பெருமளவில் அதிகரித்து விட்டது. சிறிய சண்டை என்றாலும் அது உடனே விவாகரத்தில் சென்று தான் முடிகிறது. இப்படி விவாகரத்து செய்வதனால் குழந்தைகளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும். இதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கானது 10 வருடத்திற்கு மேலாக நடந்து வந்த நிலையில் விவகாரத்து வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 69 வயதில் தன்னுடைய விவகாரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் தன்னுடைய மனைவியோடு இணைந்துள்ளார்.

இதனை பார்த்த விவகாரத்து செய்ய வழக்கு தாக்கல் செய்திருந்த மற்ற இளம் ஜோடிகளும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.