தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருவரும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்கள் முன்பு வீடு திரும்பிய விஜயகாந்த், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்த விபரங்களை இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.