காய்ச்சல் காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி... திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று காய்ச்சல் காரணமாக திடீரென திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சிக்கு வந்த திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக திருச்சியில் உள்ள மாருதி தனியார் மருத்துவமனையில் இன்று துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திமுக பொருளாளர் துரைமுருகன், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த துரைமுருகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.