மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாளை புதுச்சேரியில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மணிப்பூரில் கலவரத்தை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து புதுச்சேரியில் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சுதேசி மில் அருகே காலை 10 மணிக்கு துவங்கும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை வகித்தார்.

இதில் மாநில தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தலைமைக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.