தந்தை பற்றி வரும் பொய்தகவல்களை நம்பாதீர்கள்; எஸ்.பி.பி. சரண் வேண்டுகோள்

என் தந்தையின் உடல் நிலை பற்றி நானும், மருத்துவமனை நிர்வாகமும் தெரிவிப்பதுதான் உண்மையான தகவல்கள் என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து தினமும் அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோவை வெளியிட்டு அப்டேட்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் வெளியிட்ட வீடியோவில் அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தற்போதும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் என் அப்பாவுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக ஊடகங்களில் வெளிவரும் தகவல் தவறானது. இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் எனது தந்தையின் குறித்து அதிகாரப்பூர்வமாக தான் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கும் தகவல் மட்டுமே உண்மை என்றும் மற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.