விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்

விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து கடந்த 2ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேமுதிக தலைமை கழகம் கூறியதாவது:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.