பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுவீடாக விநியோகம்

சென்னை: தமிழகத்தில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடுவீடாக வினியோகிக்கப்பட்டது.

அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

டோக்கன்கள் இன்று முதல் 8-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன. நாளொன்றுக்கு 200 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்குவார்கள்.

அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையில், எந்தெந்த அட்டைதாரர்கள் எந்த தேதியில் வந்து பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.