சென்னையில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை


சென்னை: சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை ... சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியும் நடைபெறவுள்ளது. இதனால் 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதையடுத்து சென்னையில் நாளை முதல் வருகிற 17-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் வருகை தருவதை ஓட்டி, நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.