நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை

நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.