தெலுங்கானாவில் பள்ளி,கல்லூரிகளுக்கான தசரா விடுமுறைகள் நீடிக்கப்படவில்லை

தெலுங்கானா: தசரா விடுமுறைகள் நீடிக்கப்படவில்லை ... தசரா பண்டிகையை ஒட்டி தெலுங்கானா மாநிலத்தில் செப்டெம்பர் மாத இறுதியில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னதாக அக்டோபர் 10ம் தேதி கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதன்பிறகு அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. இதற்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டியதுள்ளது. இதையடுத்து நடுவில் 1 வாரம் மட்டுமே மீண்டும் பள்ளி,கல்லூரிகள் இயங்க உள்ளதால் மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வர வேண்டிய சூழல் உள்ளதாக பலரும் தெரிவித்தனர்.

இதனால், தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் அக்டோபர் 26ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என செய்திகள் பரவி வந்தது.இதனை அடுத்து இந்த நிலையில், தெலுங்கானா கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி, தசரா விடுமுறைகள் அக்டோபர் 26ம் தேதி வரை நீடிக்கப்படவில்லை என்றும், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இது குறித்து வெளியிடப்படவில்லை. திட்டமிட்டபடி அக்டோபர் 10ம் தேதி முதல் மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படும் என உறுதி செய்துள்ளது.