அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று நிலநடுக்கம்

இந்தியா: அந்தமான் நிகோபர் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 நிலநடுக்கம் ... இந்திய அரசின் தீவுகளில் ஒன்றான அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவானதாக தேசிய புவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கமான இன்று அதிகாலை சரியாக 4.17 மணி அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் அந்தமான் தீவுகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குழுங்கின. திடீர் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை இன்னும் வெளியாகவில்லை. அந்தமான் நிகோபர் தீவுகளில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த பகுதி மக்களிடையே பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.