இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் ...அதிச்சி தகவல்

இந்தியா: 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு .... துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 8000 க்கும் அதிகமானவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது.

இதையடுத்து இந்த நிலையில் குஜராத் உள்பட 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் குஜராத், பீகார், அசாம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் டெல்லி, என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிலநடுக்க ஆபத்து இருப்பதாகவும் இந்தியாவின் 59% நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.