மகா மாரியம்மமன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி: கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டார்.

முன்னதாக, சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க, ஊர் பெரியவர்களால் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.