எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர் செல்வம் அகமதாபாத் செல்ல உள்ளனர்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100 . கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரு புகழ்பெற்ற 100 ஆண்டு சகாப்தம் இறைவனின் திருவடியில் இளைப்பாறுகிறது என்று தனது அம்மாவின் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த சூழலில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அகமதாபாத செல்ல உள்ளனர். இதையடுத்து இருவரும் வெவ்வேறு விமானங்களில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.