எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை நல்வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை நல்வாழ்த்து தெரிவிப்பு ..... தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதையடுத்து இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.இந்நன்னாளில் கல்வி,செல்வம், துணிவை அளிக்கும் கலைமகள்,திருமகள்,மலைமகள் அருளால் வாழ்வில் வெற்றிகள் குவிந்து மேன்மை பெற வாழ்த்துகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னை மகா சக்தியின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று, பகையின்றி ஒற்றுமையோடு வாழ்ந்திட எனது 'ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி' நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தளர்வறியா மனம் கொண்டுகல்வியில் சிறந்து தொழிலில் உயர்ந்து செல்வத்தில் நிறைந்து வாழ்வாங்கு வாழ
அனைவருக்கும் என் இனிய #சரஸ்வதிபூஜை மற்றும் #ஆயுதபூஜை நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்

மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ‘உழைப்பின் மூலமே வெற்றி’என்பதை உணர்த்த நவராத்திரி பண்டிகையில் வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடும் மக்கள் அனைத்து வளமும் பெற்று, தொழில் வளம் பெருகி நல்வாழ்வு வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு அனைவர்க்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டுள்ளார்.