வரும் அக்டோபர் 14ஆம் தேதி காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடி: வேலைவாய்ப்பு முகாம் மற்றும் உதவித்தொகையும் பெறலாம்.. தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை வாயிலாக வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் தொடர்ந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அக்.14 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே இதன் வாயிலாக சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 5ம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ என்று அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் பங்கேற்று பயனடையலாம்.

இதையடுத்து இம்முகாமில் பங்கேற்க வருபவர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் முகாமில் திறன் பயிற்சி, போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி, வேலையைப்பற்றவர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் ஆகியவை வழங்கப்படும்.