காஞ்சிபுரத்தில் வரும் 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் : வேலைவாய்ப்பு முகாம் ... இது தொடர்பாக ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மகளிர் அதிக வேலைவாய்ப்பினை பெறும் பொருட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (Tata Electronics) நிரந்தர பணியில் பணிபுரிய +2 வரையில் மட்டும் படித்த பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

இதையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஓராண்டு பயிற்சி முடித்தவுடன் நிரந்தர பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஓராண்டு பணிபுரிந்த பின் அவர்களுக்கு Tata Electronics நிறுவனத்தில் பி.எஸ்சி டிகிரி சான்றிதழ் வழங்கப்படும். வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே அவர்களுக்கு ரூ.15,000/- ஆரம்ப ஊதியமாக வழங்கப்படுவதுடன் உணவு, உடை, தங்குமிடம் போன்றவை சலுகை அடிப்படையில் வழங்கப்படும்.

இதனை அடுத்து விருப்பம் உள்ள நபர்கள் வரும் 18ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சுயவிவர குறிப்பு ஆகிய அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு 044 - 27237124 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த நேர்முக தேர்வில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைதேடும் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.