ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் மே 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.