லால்குடியில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் லால்குடி கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே போதிய தண்ணீர் இயற்கை மற்றும் இடர்பாடுகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது .

எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலத்தை கணக்கிட அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர் . இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சிவ சுப்பிரமணியன் விரைவில் புள்ளி விவரங்களை எடுக்க உத்தரவிடுவதாக கூறினார் .

இந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, மன்னச்சநல்லூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகளும் விவசாய சங்க பிரதிநிதிகளும் அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர்.