விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24ஆம் தேதி

விருதுநகர் : விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆட்சியர் ஜெயசீலன் அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.02.2023 அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

எனவே மேற்படி கூட்டத்தில், விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

இதையடுத்து விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்தியும், கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.