துணை ஜனாதிபதி தேர்தல் ... வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

புதுடெல்லி: நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20 ஆம் தேதி வேட்பு மனுவுக்கான பரிசீலனை நடைபெறும்.

மேலும், தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்கு முன்பாகவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வது அவசியமாகும்.