துப்பாக்கிச்சூட்டில் மீனவர் பலி... தமிழக – கர்நாடக எல்லையில் போலீசார் குவிப்பு

சேலம்: தமிழக – கர்நாடக எல்லையில் போலீசார் குவிப்பு... கடந்த 14-ம் தேதி கர்நாடகாவின் அடிபாலார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ராஜா உயிரிழந்தார்.

அவரது உடல் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் .

இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநில போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக-கர்நாடக எல்லை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .