உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகம்

சீனா: சீனாவில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 32 தொழில் முறைத் திட்டங்கள் கையெழுத்தாயின.

ஷாங்காயில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிபடுத்தி இருந்தனர்.நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இதில் கால்பந்து விளையாடும் ரோபோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.