ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் பயங்கரவாதி உட்பட 4 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு: பயங்கரவாதி உட்பட 4 பேர் சுட்டுக் கொலை... ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோந்த பயங்கரவாதி உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபூா் துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தியதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதேபோல தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், துஜ்ஜான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோந்த மஜித் நஸீா் உள்ளிட்ட இருவா் கொல்லப்பட்டனா்.

இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் ஃபரூக் அகமது மீா் கொலை சம்பவத்தில் மஜித் நஸீருக்கு தொடா்பு இருப்பதாக காஷ்மீா் ஐ.ஜி. விஜய்குமாா் தெரிவித்துள்ளாா்.