மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் .. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ... தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் 1 லட்சம் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவச மின்சாரம் வழங்கியது.

இதனை அடுத்து முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் காத்திருப்பு பட்டியில் 50 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் .

அதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அத்துடன் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.