விட்டுக் கொடுத்தார் ஜி.கே.வாசன்... உற்சாகத்தில் திளைக்கும் அதிமுக ஈ.பி.எஸ். அணியினர்

சென்னை: ஈரோடு தொகுதியை ஜி.கே.வாசன் விட்டுக் கொடுத்துள்ளதால் அதிமுக ஈ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அடுத்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஈரோடு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிமுக ஈபிஎஸ் அணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அதிமுக இரண்டு அணியாக பிரிந்துள்ளதால் இந்த தேர்தல் மூலம் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று நிரூபிக்க கிடைத்த சான்ஸ் என்று ஈ.பி.எஸ். அணியினர் உற்சாகத்தில் உள்ளனராம்.