ஆந்திராவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கம், வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

தங்கம், வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்... ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள வீட்டில், 8 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலை தொடர்ந்து,
புக்கரயசமுத்ராவில் வசிக்கும் பாலப்பாவின் வீட்டில் சோதனை செய்த போலீசார், 2 கிலோ 420 கிராம் எடையிலான தங்கம் மற்றும் 84 கிலோ எடையிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கிருந்து 15 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு ஏர் கன்-ஐ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பாலப்பாவின் மருமகனான நாகலிங்கா, ஆபரணங்கள் மற்றும் பணத்தை பதுக்கியதும் தெரிய வந்துள்ளது.

மனோஜ் ஆந்திர அரசின் கருவூலத்துறை அதிகாரிக்கு கார் ஓட்டுனராக பணிபுரிவதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.