கோத்தபய ராஜபக்சே,வருகிற 24-ந் தேதி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மிக பெரும் பொருளாதார நெருக்கடியால் பெரும் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே முக்கிய காரணம் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில்மிக தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13-ந் தேதி கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினமா செய்தார்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்துக்கு சென்றார். தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்கும்படி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோத்தபய அடுத்த வாரம் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பவார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்கா தெரிவித்துள்ளார். கோத்தபய வருகிற 24-ந் தேதி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.