ஜிம்பாவே-ல் ஊரடங்கு விதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு திட்டம்

ஊரடங்கு விதிகளை தளர்த்த திட்டம்... கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜிம்பாப்வே நாட்டில் ஊரடங்கு விதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜிம்பாப்வே நாட்டிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், பொருளாதாரத்தை மேம்படுத்த ஊரடங்கு விதிமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.