விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

தம்மம்பட்டி: மண்டல அளவிலான தடகளப்போட்டியில், தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், வடிவேலு என்ற மாணவர் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் 9 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று கொண்டையம்பள்ளி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனைப் படைத்தனர்.

பதக்கங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.