விநாயகர் சதுர்த்தி .. மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

மேலும் அதே போல நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும்.

இதனை தொடர்ந்து இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், 'விநாயகப் பெருமான் நமக்கு ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கட்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.