வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் ... அரசு அறிக்கை

சென்னை : தமிழகம் முழுவதும் சுமார் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என அறிக்கை .... மழை காலம் வந்து விட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்ளை தமிழக அரசு மாநில பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதில் 719 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 1,086 இடங்கள் மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 3 அடி முதல் 5 அடி வரையும், மிதமான பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரையும், குறைவான பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 2 அடிக்கும் குறைவாக வெள்ள நீர் தேங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி 317 இடங்கள் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து அதில் மழை காலம் என்றால் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்சமாக செங்கல்பட்டில் 389 இடங்களும், சென்னையில் 332 இடங்களும், கடலூரில் 293 இடங்களும், நீலகிரியில் 284 இடங்களும், மயிலாடுதுறையில் 228 இடங்களும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.