மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிவு

மேட்டூர்: நீர்வரத்து சரிவு .... கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 847 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது .

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது .ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 9 மணி முதல் 8000 கன அடியாக குறைக்கப்பட்டது.