மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி... பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: மாபெரும் வெற்றி... நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது, மனித குலத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.

இந்தியாவை நினைத்து உலக நாடுகள் பெருமைகொள்ளும் தருணம் உருவாகியுள்ளது.

சந்திரயான் -3 விண்கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் நமது அடுத்தக்கட்ட திட்டம்.