ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் கோர்ட்

குஜராத்: மேல் முறையீட்டு மனு தள்ளுபடி... மோடி சமூக பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எந்த முகாந்திரமும் தற்போது இல்லை என்று மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தெரிவித்தார்.

ராகுல் காந்தி மீது இதுபோன்று மேலும் 10 கிரிமினல் வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தார்.

தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்விலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.