இளவரசர் ஜார்ஜ் காரணமாக எதிர்காலம் தொடர்பில் ஹாரி அச்சம்

பிரிட்டன்: வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் மகனான இளவரசர் ஜார்ஜ் காரணமாக தமது எதிர்காலம் தொடர்பில் ஹாரி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் தமக்கும் ஏற்படலாம் என்றே ஹாரி அஞ்சுவதாக கூறப்படுகிறது.

இளவரசர் ஜார்ஜ் 18 வயதைக் கடந்தால், அவருக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.அப்போது இளவரசர் ஹாரி அரண்மனைக்கு பொருத்தமற்றவர் என மொத்தமாக ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே ஹாரி அஞ்சுவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது 62 வயதாகும் இளவரசர் ஆண்ட்ரூ ராஜகுடும்பத்தில் செயல்படும் உறுப்பினராக இல்லை. ராணியாரின் செல்லப்பிள்ளை என்பதாலையே, அவர் மொத்தமாக ஒதுக்கப்படாமல் இருந்து வந்தார்.


மேலும், ஆண்ட்ரூவால் ஏற்பட்ட விவாதங்கள் காரணமாக தற்போதைய மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மகன் வில்லியம் ஆகியோரின் ஆலோசனையின் படியே, ஆண்ட்ரூவின் மொத்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் இளவரசர் ஹாரி போன்று செயற்படாத உறுப்பினர் வரிசையில் உள்ளார். இந்த நிலையில், தமது 60 வயதில், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தாம் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக இளவரசர் ஹாரி அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், இளவரசர் ஜார்ஜ் உரிய பொறுப்புக்கு வரும் முன்னர், அதாவது அவருக்கு 18 வயதாகும் முன்னர் தமது இருப்பை தக்கவைக்க வேண்டும் என ஹாரி முடிவு செய்துள்ளதாகவும், தற்போது தமக்கு ஆதரவாக ராணியாரும் இல்லை என்பதால், எதிர்காலம் சிக்கலில் முடியலாம் எனவும் ஹாரி கருதுவதாக கூறப்படுகிறது.