கடும் பனிமூட்டம் .. உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் தாமதம்

உத்தரபிரதேசம் : ரெயில்கள் இன்று 6-7 மணிநேரம் தாமதம் ..... வட இந்தியா முழுவதும் குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டமான வானிலையின் பிடியில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் வட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏறக்குறைய 26 ரெயில்கள் இன்று தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று பெரும்பாலான ரெயில்கள் 6-7 மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரெயில் ரத்து செய்யப்பட்டது பற்றி முன்னதாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பனிமூட்டம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.