தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை

அடுத்த 48 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, தர்மபுரி, கோவை, திண்டுக்கல் , ஈரோடு கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ,சேலம் , விழுப்புரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை போன்ற 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்று என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.