40 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கொட்டித்தீர்த்த மழை

புதுடில்லி: கொட்டி தீர்த்த கனமழை... கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் இரண்டு நாட்களாக கொட்டிய மழையில், இயல்பு வாழ்க்கை முடங்கியது.

டெல்லி,நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே நீச்சல் குளம் போல நீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ரோகிணி பகுதியில் சாலையில் ஏற்பட்ட சரிவால் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள், மருத்துவமனைகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.