தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 6 மாவட்டங்களில்இன்று மிக கனமழை .... தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்தது. அது காற்றழுத்த தாழ்வு மாண்டலமாக வலுக்குறைந்து வடதமிழக பகுதிகளில் நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனை அடுத்து திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இக்கனமழை நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.